என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது: சிவகார்த்திகேயன்
Byமாலை மலர்24 Oct 2016 10:05 AM GMT (Updated: 24 Oct 2016 10:05 AM GMT)
ரஜினியின் வாழ்த்து தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி மலர் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணு தலைமை தாங்கினார். மலரை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் அழைத்துச் செல்லும் பாலமாக பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு பிறகு ‘ரெமோ’ வசூலில் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்வோம். ரஜினி போன் செய்து என்னை வாழ்த்தினார். இதனால் எனது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
இந்த வெற்றி என் ஒருவனால் வந்தது அல்ல. எல்லோருக்கும் பிடித்தமான படங்களை தந்து என் பெயரை காப்பாற்ற முயற்சி செய்வேன். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்” என்றார்.
விழாவில் இயக்குனர்கள் பொன்ராம், விஜய்மில்டன், நடிகர் கிரிஷ், பாடலாசிரியர் உமா தேவி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் அழைத்துச் செல்லும் பாலமாக பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு பிறகு ‘ரெமோ’ வசூலில் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்வோம். ரஜினி போன் செய்து என்னை வாழ்த்தினார். இதனால் எனது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
இந்த வெற்றி என் ஒருவனால் வந்தது அல்ல. எல்லோருக்கும் பிடித்தமான படங்களை தந்து என் பெயரை காப்பாற்ற முயற்சி செய்வேன். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்” என்றார்.
விழாவில் இயக்குனர்கள் பொன்ராம், விஜய்மில்டன், நடிகர் கிரிஷ், பாடலாசிரியர் உமா தேவி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X