என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அமெரிக்காவில் தமிழர்கள் ஏற்பாடு செய்த அம்மணி சிறப்பு காட்சி
Byமாலை மலர்24 Oct 2016 7:37 AM GMT (Updated: 24 Oct 2016 8:33 AM GMT)
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கம், நடிப்பில் வெளிவந்திருக்கும் அம்மணி படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘அம்மணி’. பெற்றப்பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் அம்மாக்கள் கதை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலக தமிழர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ் நகரில் சிறப்பு திரைப்படமாக திரையிடுகிறார்கள்.
இந்த நகரில் வாழும் தமிழர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்திய கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் ஐ.எல்.எப். அமைப்புக்கு வழங்குகிறார்கள். ‘அம்மணி’ படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், “அம்மணி படத்துக்குப் பிறகு என்னுடைய குரல் பலருடைய கவனத்தை ஈர்த்து இருப்பதை நான் முழுமையாக உணர்கிறேன். உலக அளவில் அனைவராலும் ‘அம்மணி’ படம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ரசிகர்களிடம் இருந்து வரும் வாழ்த்துக்களும், கருத்துக்களும் இதற்கு உதாரணம்.
எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவியாக இருந்த கணவர், மகள், மருமகன் ஆகியோருக்கும் நன்றி. இவை அனைத்தையும் முடிவு செய்து நடத்தியது இறைவன். எனவே இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டியது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நகரில் வாழும் தமிழர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்திய கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் ஐ.எல்.எப். அமைப்புக்கு வழங்குகிறார்கள். ‘அம்மணி’ படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், “அம்மணி படத்துக்குப் பிறகு என்னுடைய குரல் பலருடைய கவனத்தை ஈர்த்து இருப்பதை நான் முழுமையாக உணர்கிறேன். உலக அளவில் அனைவராலும் ‘அம்மணி’ படம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ரசிகர்களிடம் இருந்து வரும் வாழ்த்துக்களும், கருத்துக்களும் இதற்கு உதாரணம்.
எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவியாக இருந்த கணவர், மகள், மருமகன் ஆகியோருக்கும் நன்றி. இவை அனைத்தையும் முடிவு செய்து நடத்தியது இறைவன். எனவே இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டியது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X