search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
    X

    தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

    சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தனுஷ் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி பெண் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவிருக்கிறார்களாம். படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்பதுதான் இந்த படத்தின் தலைப்பாம்.

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை இரண்டையும் நடிகர் தனுஷ் எழுதவுள்ளாராம். தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். அதோடு, இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை எழுதப்போவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார். டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×