என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
உள்குத்து திரைப்படம் நந்திதாவுக்கு மைல்கல்லாக அமையும்: நடிகர் தினேஷ்
Byமாலை மலர்3 Sep 2016 2:34 PM GMT (Updated: 3 Sep 2016 2:34 PM GMT)
'உள்குத்து' திரைப்படம் நடிகை நந்திதாவுக்கு மைல்கல்லாக அமையும் என நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
'அட்டகத்தி' புகழ் ஜோடி நந்திதா-தினேஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் உள்குத்து. இப்படத்தில் தினேஷ் மீன் வெட்டும் தொழிலாளராக நடித்திருக்கிறார். கார்த்திக் ராஜு இயக்கியிருக்கும் இப்படத்தில் தினேஷ்-நந்திதாவுடன் இணைந்து ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
தினேஷின் 'திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து' படங்களைத் தொடர்ந்து 'உள்குத்து' படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தினேஷ் பேசுகையில் ''உள்குத்து திரைப்படம் என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மட்டுமின்றி கதாநாயகி நந்திதாவின் திரைப்பட வாழ்க்கையிலும் முக்கியமான மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது'' என்றார்.
நடிகர் ஸ்ரீமன் பேசுகையில், ''இயக்குனர் பாரதி ராஜா சாருக்கு பிறகு, முட்டம் பகுதியை நன்கு ஆராய்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்தியவர் இயக்குனர் கார்த்திக் ராஜு தான். 'உள்குத்து' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தினேஷின் 'திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து' படங்களைத் தொடர்ந்து 'உள்குத்து' படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தினேஷ் பேசுகையில் ''உள்குத்து திரைப்படம் என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மட்டுமின்றி கதாநாயகி நந்திதாவின் திரைப்பட வாழ்க்கையிலும் முக்கியமான மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது'' என்றார்.
நடிகர் ஸ்ரீமன் பேசுகையில், ''இயக்குனர் பாரதி ராஜா சாருக்கு பிறகு, முட்டம் பகுதியை நன்கு ஆராய்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்தியவர் இயக்குனர் கார்த்திக் ராஜு தான். 'உள்குத்து' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X