என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாபி சிம்ஹாவுக்கு வில்லனான பிரசன்னா
Byமாலை மலர்27 Aug 2016 9:24 AM GMT (Updated: 27 Aug 2016 9:24 AM GMT)
பாபி சிம்ஹாவுக்கு வில்லனாக பிரசன்னா நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
2006-ல் வெற்றி பெற்ற படம் ‘திருட்டுப்பயலே’. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய இந்த படத்தின் அடுத்த பாகம் ‘ திருட்டுப்பயலே-2’ என்ற பெயரில் தயாராகிறது.
இதில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். பிரசன்னா வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி கூறிய சுசிகணேசன், “பத்து வருடத்துக்கு முன்னால் இருந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக்காணோம். சிறுசிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு காரணம்” என்றார்.
முதல் பாகத்தின் பெரும் பகுதி ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘திருட்டுப்பயலே-2’ க்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக்கொண்ருக்கிறார்கள். பெரும் பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X