என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித், விஜய்யை தொடர்ந்து சல்மான்கானுடன் இணையும் ஸ்ரீதேவி
Byமாலை மலர்23 Aug 2016 7:58 AM GMT (Updated: 23 Aug 2016 7:58 AM GMT)
அஜித், விஜய்யை தொடர்ந்து அடுத்ததாக சல்மான்கானுடன் ஸ்ரீதேவி இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
90-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு, படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தமிழ், இந்தியில் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அஜித், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தில் அரசியாக நடித்து பெயர் பெற்றார். இதனால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஸ்ரீதேவி, அடுத்ததாக சல்மான்கானுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்.
அந்த படத்தில் ஸ்ரீதேவி, சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கவில்லை. அந்த படத்தை சல்மான்கான் தயாரிக்க மட்டுமே செய்கிறார். அம்மா-மகன் பாசத்தை சொல்லும் விதமாக அமையவுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாக நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல், பிற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் அறிவிக்கப்படவில்லை. விரைவில், அதுகுறித்த செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேவி ஏற்கெனவே சல்மான் கானுடன் ஒன்றிரண்டு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சல்மான்கானுடன் ஸ்ரீதேவி இணைந்து பணியாற்றப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், இந்தியில் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அஜித், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தில் அரசியாக நடித்து பெயர் பெற்றார். இதனால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஸ்ரீதேவி, அடுத்ததாக சல்மான்கானுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்.
அந்த படத்தில் ஸ்ரீதேவி, சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கவில்லை. அந்த படத்தை சல்மான்கான் தயாரிக்க மட்டுமே செய்கிறார். அம்மா-மகன் பாசத்தை சொல்லும் விதமாக அமையவுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாக நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல், பிற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் அறிவிக்கப்படவில்லை. விரைவில், அதுகுறித்த செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேவி ஏற்கெனவே சல்மான் கானுடன் ஒன்றிரண்டு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சல்மான்கானுடன் ஸ்ரீதேவி இணைந்து பணியாற்றப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X