search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    குடும்பத்தினரின் பேச்சை நடிகை அமலாபால் கேட்பதில்லை: டைரக்டர் விஜய்யின் தந்தை குமுறல்
    X

    குடும்பத்தினரின் பேச்சை நடிகை அமலாபால் கேட்பதில்லை: டைரக்டர் விஜய்யின் தந்தை குமுறல்

    குடும்பத்தினரின் யாருடைய பேச்சையும் அமலாபால் கேட்பதில்லை என்று இயக்குனர் விஜய்யின் அப்பா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...

    கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகனும், டைரக்டருமான விஜய்யை கடந்த 2014–ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் இருவரும் சென்னை போட்கிளப் பகுதியில் சேர்ந்து வாழ்ந்தனர். 2 ஆண்டுகள் இனிமையாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த தகவல் மெல்ல மெல்ல கசிந்து ஊடகங்களிலும் பரவியது. அமலாபாலை டைரக்டர் விஜய், விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு இரு தரப்பினரும் மவுனம் காத்தனர்.

    விரிசல் பெரிதான நிலையில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டைரக்டர் விஜய், விவாகரத்து பற்றி குறிப்பிடாமல் குடும்பத்தினரின் கருத்தே, எனது கருத்து என்றும், அவர்கள் விரும்புவதைத்தான் நான் செய்வேன் என்று கோடிட்டு காட்டினார்.

    டைரக்டர் விஜய் பேட்டி வெளியான மறுநாள் அவரது தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் ஒரு டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில் தனது மனக் குமுறலை கொட்டி தீர்த்தார்.

    அவர் கூறியதாவது:– நடிகை அமலாபால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. எனவே அவரை நடிப்புலகில் இருந்து விலகிக் கொள்ளும்படி கூறினோம். அவர் அதை ஏற்கவில்லை. மாறாக தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

    இதுபற்றி எங்களுடனோ, அல்லது அவரது கணவர் டைரக்டர் விஜய்யுடனோ ஆலோசிப்பதில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. கொஞ்சமேனும் குடும்பத்தினரின் கருத்தை மதிக்கவேண்டும் என்று அமலாபாலிடம் கூறினோம். அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொள்கிறேன் என்றார்.

    ஆனால் அவரது பேச்சை அவரே கேட்கவில்லை. தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஏற்பாடு செய்து வந்தார். இது குடும்பத்தினரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. எங்களுக்கு, எங்கள் மகன் விஜய்யின் நல்வாழ்க்கைதான் முக்கியம். எனவே இந்த பிரச்சினையில் சட்டரீதியாக முடிவு எடுக்க விரும்பினோம். இதுதான் உண்மை.

    டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் இருவரை பற்றியும் சமீப நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சென்னையில் தங்கி இருந்த நடிகை அமலாபால் தற்போது தனது குடியிருப்பை கொச்சிக்கு மாற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×