என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித்தை தொடரும் பாபி சிம்ஹா
Byமாலை மலர்25 July 2016 10:00 AM GMT (Updated: 25 July 2016 10:00 AM GMT)
அஜித்தை தொடர்ந்து பாபி சிம்ஹா ஒரு முயற்சியை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
பாபி சிம்ஹா தற்போது தயாரித்து நடித்து வரும் புதிய படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கி வருகிறார். ஷிவதா, பூஜா தேவரியா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காமெடி நடிகர் கருணாகரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சரி, மேற்கூறிய செய்திக்கும் அஜித்தை பாபி சிம்ஹா தொடர்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்பதுதான் உங்களின் கேள்வி. அதற்கு பதில் இருக்கிறது. அஜித் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன்’ படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார். அதேபோல், இப்படத்தில் பாபி சிம்ஹா பதினொரு கெட்டப்புகளில் நடித்து கலக்கியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி, ‘சிட்டிசன்’ படம் படமாக்கப்பட்ட பழவேற்காடு ஏரியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படம் படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த படம் மட்டும்தான் பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். இப்படத்தை பாபி சிம்ஹாவுடன் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
சரி, மேற்கூறிய செய்திக்கும் அஜித்தை பாபி சிம்ஹா தொடர்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்பதுதான் உங்களின் கேள்வி. அதற்கு பதில் இருக்கிறது. அஜித் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிட்டிசன்’ படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார். அதேபோல், இப்படத்தில் பாபி சிம்ஹா பதினொரு கெட்டப்புகளில் நடித்து கலக்கியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி, ‘சிட்டிசன்’ படம் படமாக்கப்பட்ட பழவேற்காடு ஏரியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படம் படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த படம் மட்டும்தான் பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். இப்படத்தை பாபி சிம்ஹாவுடன் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X