search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புகிறாரா ரஜினி? - வைரலாகும் புகைப்படம்
    X

    அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புகிறாரா ரஜினி? - வைரலாகும் புகைப்படம்

    அமெரிக்காவில் ஓய்வெடுப்பதற்காக சென்றுள்ள ரஜினி தற்போது சென்னை திரும்பியதுபோல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...
    ‘கபாலி’ படத்தை முடித்துவிட்டு, ஒய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாக அங்கே தங்கியிருந்து ஓய்வெடுத்து வருகிறார். ரஜினி எப்போது இந்தியா திரும்புவார் என்பது பலரது கேள்விகளாகவும் இருந்து வருகிறது. இந்த மாத இறுதியில் அவர் இந்தியா திரும்பிவிடுவார் என்று ஒரு தரப்பினரும், ஆகஸ்ட் மாதத்தில்தான் அவர் இந்தியா திரும்புவார் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், சமீபத்தில் ரஜினி, அமெரிக்காவில் ஆசிரமத்துக்கு சென்றதுபோலவும், ரோட்டில் வாக்கிங் செல்வது போன்றவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஏர்போர்ட்டில் ரஜினி நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    இந்த புகைப்படத்தின் பின்னணியில் ரஜினி, ஏர்போர்ட்டில் இருப்பது தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதுதான் என்பதும் உறுதியாக தெரிகிறது. ஆனால், அவர் சென்னை வருவதற்காக ஏர்போர்ட்டுக்கு வந்தாரா? அல்லது வேறு எங்காவது செல்வதற்காக ஏர்போர்ட் வந்தாரா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

    இருப்பினும், சில பேர் இந்த புகைப்படத்தை பார்த்து ரஜினி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்காக ஏர்போர்ட் வந்ததாகவும், நாளை அவர் சென்னையில் இருப்பார் என்றும் சமூக இணையதளங்களில் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ நாளை சென்னையில் ரஜினி இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.
    Next Story
    ×