search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விக்ரமுக்காக இணையும் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா பிரபலங்கள்
    X

    விக்ரமுக்காக இணையும் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா பிரபலங்கள்

    விக்ரமுக்காக தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா பிரபலங்கள் மூன்றுபேர் இணையவிருக்கிறார்கள். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்..
    விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இருமுகன்’. இப்படத்தை ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார். நயன்தாரா முதன்முதலாக விக்ரமுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்பாடல்களை வருகிற ஆக.2-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் தற்போதைய இளம் ஹீரோக்களில் முக்கியமான மூன்று பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர்.



    அதாவது, தமிழ் சினிமாவை சேர்ந்த வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயன், மலையாள திரையுலகை சேர்ந்த நிவின்பாலி, தெலுங்கு திரையுலகை சேர்ந்த ராம்சரண் தேஜா மூன்று பேரும் சிறப்பி விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். ‘இருமுகன்’ படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பெரும் பொருட்செலவில் சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

    Next Story
    ×