என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க வரும் ஸ்ரேயா
Byமாலை மலர்13 July 2016 10:45 AM GMT (Updated: 13 July 2016 10:45 AM GMT)
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ள ஸ்ரேயா, ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கப் போகிறாராம். அதுகுறித்து பார்ப்போம்...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் ஒரு நாயகியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் முதல்கட்ட படப்பிடிப்பில் ஸ்ரேயா கலந்துகொண்டு நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரேயாவின் கதாபாத்திரம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இந்த படத்தில் ஸ்ரேயா, செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் எமோஷனல் ஆனது. இந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கண்டிப்பாக கொள்ளையடிப்பார். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தோடு அவர் ஒன்றி நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஸ்ரேயா நடிப்பில் கடைசியாக கடந்த 2011-ம் ஆம் ஆண்டு ‘ரௌத்திரம்’ படம் வெளிவந்தது. அதன்பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படம் இதுதான். ஸ்ரேயாவுடன் இப்படத்தில் மஹத், மொட்டை ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் மாரி மணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் மற்ற இரண்டு கதாநாயகிகள் தேடும் படலமும் நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்றுவரும் முதல்கட்ட படப்பிடிப்பில் ஸ்ரேயா கலந்துகொண்டு நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரேயாவின் கதாபாத்திரம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இந்த படத்தில் ஸ்ரேயா, செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் எமோஷனல் ஆனது. இந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கண்டிப்பாக கொள்ளையடிப்பார். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தோடு அவர் ஒன்றி நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஸ்ரேயா நடிப்பில் கடைசியாக கடந்த 2011-ம் ஆம் ஆண்டு ‘ரௌத்திரம்’ படம் வெளிவந்தது. அதன்பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படம் இதுதான். ஸ்ரேயாவுடன் இப்படத்தில் மஹத், மொட்டை ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் மாரி மணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் மற்ற இரண்டு கதாநாயகிகள் தேடும் படலமும் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X