search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம விலங்கு"

    • காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த ஆடு
    • இதுவரை 9 ஆடுகள் பலி

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகேகே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சதாசிவம் . இவர், தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார்.

    நேற்று அதிகாலை சதாசிவம் எழுந்து பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்து ஆடு காயத்துடன் துடித்துக் கொண்டிருந்தது.. இதுகுறித்து அவர் நாட்டறம்பள்ளி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்.

    கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயத்துடன் துடித்துக் கொண் டிருந்த ஆட்டுக்கு சிகிச்சை அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    நாட்டறம்பள்ளி பகுதியில் மர்ம விலங்கு நடமாட் டத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    ×