search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சிப்பாறை அணை"

    • முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுஉள்ளது.
    • தொடர்ந்து கொட்டாரம் பகுதியில் உள்ள புத்த னாறுகால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் தொடங்கிவிட்டன.

    கன்னியாகுமரி,


    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகு படியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன.

    இதைத்தொடர்ந்துஇந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த2மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடந்தன.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில்உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பா ல்அருகே உள்ள சாட்டுப்பு தூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில்உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும்பள்ளக்கால்வாய்பகுதிவரை24கிலோமீட்டர்560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுஉள்ளது.

    தொடர்ந்து கொட்டாரம் பகுதியில் உள்ள புத்த னாறுகால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் தொடங்கிவிட்டன.

    ×