என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயிற்சி வகுப்பு"
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மாதம் சுமார் 6,300 டன் கரும்புகள் அரவை செய்யப்படுகிறது.
கடந்த 10 வருடங்களுக்கு இந்த அரவை ஆலையின் செயல்திறன் ஆண்டுக்கு 2.50 லட்சம் டன் என்ற நிலையில் இருந்தது.
ஆனால் தற்போது ஆண்டுக்கு 1.30 லட்சம் டன் என்ற அளவில் அரவை குறைந்துள்ளது. இதற்கு கரும்பு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பே காரணம். பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஆலையின் அரவை திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி டிரோன் மூலம் திரவ வடிவிலான உரங்களை தெளிப்பது குறித்து ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆலை நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை தற்போது விவசாயிகள் கைகள் மூலம் தெளித்து வருகின்றனர். இதனால் கால விரயம் , கூலி செல்வு போன்றவை ஏற்படுவதுடன் உரிய பயனும் கிடைப்பதில்லை.
டிரோன்கள் மூலம் திரவ வடிவிலான உரங்களை தெளிப்பது மூலம் பயிர்களுக்கு முழுமையான அளவில் பயன் கிடைக்கும். செலவு குறையும். மேலும் ஒரு ஏக்கருக்கு டிரோன் மூலம் 20 நிமிடத்தில் உரத்தை தெளித்து விடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான கரும்பு விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விரைவில் 2-வது பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்