search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழா"

    • இந்த வருடத்திற்கான தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடி வாரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த வருடத்தி ற்கான தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைதொடர்ந்து தினந்ேதாறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டு விதவிதமான அலங்காரங்களில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. கேரள செண்டை மேளத்துடன் அம்மன் சிறப்பு அலங்கார த்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது ஏராள மான பக்தர்கள் விதவித மான அலங்காரங்களில் கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனைதொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் கண்ணைக்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி களும் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ×