search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி கலவரம்"

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். #BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    மாதவரம்:

    செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்திய அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது பெட்ரோல், டீசல் விலைஉயர்வு. 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக மக்களை சந்திக்க இன்னும் 120 நாட்கள் உள்ளது. அப்போது 15ரூபாய் வரை குறையும்.

    சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூற முடியுமா? இரண்டு வரி புத்தகத்தை படித்து விட்டால் போதுமா?

    தூத்துக்குடியில் கலவரம் நடக்க சர்ச்சில் இருந்த பங்குத்தந்தை ஜெயசீலன் தான் காரணம். தேவாலயத்தில் மணி அடித்து விட்டு ஆயுதங்களுடன் புறப்பட்டு சென்ற பிறகே கலவரம் நடந்தது.


    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நவம்பர் 29-ந் தேதிக்கு பிறகு கைது செய்யப்படுவார். திகார் ஜெயிலில் களி தின்னும் போது கருப்பு பணம் குறித்து ப.சிதம்பரத்திற்கு அப்போது தெரியும்.

    அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் கொள்ளையர்கள், கிரிமினல்கள். அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்க சபரிமலை ஐயப்பனை வேண்டுகிறேன்.

    நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதாக கூறி சபரிமலையில் ரெஹானா என்ற பெண்ணை காவல்துறை உடையில் அழைத்து சென்ற கேரள அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காரைக்குடியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பேசிய எச்.ராஜா, ஐகோர்ட்டை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். இப்போது அவர் சபரிமலை விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டை விமர்சித்துள்ளார்.#BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் ஜஸ்டின் செல்வ மிதிஷ் (வயது 29). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த மே மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கேற்று உள்ளார். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஜஸ்டின் செல்வ மிதிஷ் தலையில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு கடந்த 22-5-2018 முதல் 29-6-2018 வரை உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேலும் கலவரத்தில் காயம் அடைந்ததால் அரசு சார்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் ஜஸ்டின் செல்வமிதிசுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜஸ்டின் செல்வ மிதிசின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 23-9-2018 அன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்து, அதற்கான சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதன்பிறகு கடந்த 9-ந் தேதி டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, 10-ந் தேதி மீண்டும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் ஜஸ்டின் செல்வமிதிஷ் பரிதாபமாக இறந்தார்.
    தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் பாளை. சிறையில் அடைத்தனர். #LawyerVanchinathan #Arrested #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    இந்த கலவரம் தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி தூத்துக்குடி சிப்காட் போலீசார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் (37), தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி 144 தடை உத்தரவை மீறி, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த வக்கீல் வாஞ்சிநாதனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையம் முன்பு நின்றபோது பிடிபட்டார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். அதன்பேரில் அவர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த சில நாட்களாக போலீசார் கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்து இருந்தனர். தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கி இருப்பதால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமான நிலையும் உருவாகி உள்ளது. 
    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.



    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின்போது 72 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiFiring #DGPReport
    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி கூறியுள்ள துணிச்சலாக கருத்து வரவேற்கத்தக்கது என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan
    கோவை:

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்க மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் இன்று கோவை வந்தார்.

    அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தமிழகம் முழுவதும் மத்திய மந்திரிகள் விளக்க இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து எதிர்கருத்துகள் வந்தால் அதை தாங்கி கொள்ளாமல் மிக மோசமான விமர்சனம் செய்யும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பி வரம்பு மீறச் செய்து அதை அபாயக்கட்டத்தில் கொண்டு போய் விடுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    போராட்டத்தின் போது சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள் என்ற பா.ஜ.க. மற்றும் ரஜினி சொல்லும் போது மற்ற கட்சிகள் ஏன் எதிர்த்து பாய்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களை கொச்சைப்படுத்துவதாக சொல்லி கொந்தளிக்கிறார்கள்.

    பஸ் மீது, கலெக்டர் அலுவலகம் மீது தீ வைத்தது மற்றும் ஆயுதம் ஏந்தி போராடியதெல்லாம் மக்கள் தானா? அப்படியென்றால் நீங்கள் தான் மக்களை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்று தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் பேசி வருகிறார்கள். இது தவறு.



    ஸ்டெர்லைட்டில் அபாயம் இருப்பதற்கு காரணம், 40 ஆயிரம் டன் காப்பர் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியின் போது ஸ்டெர்லைட் நிர்வாகம் பெற்ற ஊக்கம் தான். அதுதான் அவர்களை 4 லட்சம் டன் காப்பரை உற்பத்தி செய்ததன் விளைவு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தி.மு.க. ஒப்புக்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் சொன்னது போல தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்தது உண்மை தான். அதை மறைக்க அவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    போராட்டம் மட்டுமே தமிழகத்தில் சோறு போடும் என எல்லா கட்சிகளும் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதியாக வாழக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் நாடகத்தை எல்லா கட்சிகளும் நடத்தினால் தமிழக மக்கள் அதை புறக்கணிப்பார்கள். மிக மோசமான முன் உதாரணத்தை தமிழக அரசியலில், சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருகிறார். இப்படி வெளிநடப்பு செய்தால் தமிழக மக்கள் நலன் புறக்கணிப்படுகிறது.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1996-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டம் இந்த நிலைக்கு மாறியது சமூக விரோதிகளால் தான். தற்போது எனக்கு கடுமையாக விமர்சனங்கள் வருகிறது. தொலைபேசியில் மிரட்டல்கள் வருகின்றன.

    யாரெல்லாம் சமூக விரோதிகளை சொன்னால் கோபப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்கள். ரஜினி துணிச்சலாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது. உடனே அவர் பின்னால் பா.ஜ.க., அ.தி.மு.க. இருக்கிறது என்று சொல்லக் கூடாது. சினிமாவில் வேண்டும் என்றால் அவருக்கு டப்பிங் பேசலாம். உண்மையான அரசியலில் அப்படி இருக்க முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு காரணம் தி.மு.க., காங்கிரஸ் தான். அதற்கு முழு பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்த பிறகு வேறு எந்த பிரச்சினையை தேடலாம் என்று எதிர்கட்சிகள் யோசிப்பார்கள். இதனால் தான் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடி இருக்கின்றன. இனிமேல் தான் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும்.

    விஞ்ஞான பொருளைக் கண்டுபிடிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள். கெயில் திட்டத்தை கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தை சுடுகாடாக மாற்றத்தான் பல போராட்டங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பல உதவிகளை செய்தார். மக்களுக்கு பாதிக்கப்படுகின்ற திட்டங்களை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாது.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விடும் என்பதால் சமூக வலைதளங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் வரம்பு மீறி தரக் குறைவாக விமர்சனங்களை செய்கின்றனர்.

    இதை நாங்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டோம். எங்கள் வேலையை திறம்பட செய்வோம். என்னை பற்றி வரம்பு மீறி பேசினால் அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan

    தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது தான் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார். #ilaganesan #rajinikanth #thoothukudiprotest
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

    தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது தான். போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

    அவர்களை தூண்டி விட்ட சதிகாரர்கள் யார் என கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவத்தால் 3 விதமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



    உ.பி. மற்றும் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால் கட்சிக்கு பின்னடைவு இல்லை. தோல்விக்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்வோம்.

    கர்நாடகத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சி சதி செய்து ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.

    தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம் பாளையத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குளம் தூர் வாரப்பட்டதாக கூறி பணம் மோசடி நடைபெற்று உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் அரசு தான் கொண்டு வந்தது.

    இத்திட்டத்தில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை. இத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஆதார் கார்டு மூலம் தான் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அவ்வாறு இருந்தும் முறைகேடு நடைபெறுகிறது. இனி இவ்வாறு நடைபெறாமல் நல்ல வழி ஏற்படுத்தப்படும்.

    எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அவர்கள் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. வீட்டையும், நாட்டையும் தாங்கும் தூண் போல் செயல்பட வேண்டும்.

    முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் பயத்தில் இருப்பார்கள். இப்போது இளைஞர்கள் வெளியே சென்றால் பெற்றோர் பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட தலைவர் உத்திரகுமார், செயலாளர் சுப்பு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். #ilaganesan #rajinikanth #thoothukudiprotest
    தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினி கூறியுள்ளார். அவர் யாரை சமூக விரோதி என்று கூறினார் என்பதை அவர் விளக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுள்ளார்.

    பீளமேடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

    அவரது மனித நேயம் பாராட்டத்தக்கது. தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறினார்.

    இதே கருத்தை தான் ரஜினிகாந்தும் எதிரொலித்துள்ளார். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மதவாத சக்திகள் இதே கருத்தை தான் சொல்கின்றன. அதே கருத்தை ரஜினியும் கூறி உள்ளார். அவரது கருத்து வேதனை அளிக்கிறது.

    திரைப்படத்தில் ரஜினியை இயக்குவது போல் அரசியலிலும் ரஜினியை யாராவது இயக்குகிறார்களா? என தோன்றுகிறது.

    ரஜினி யாரை சமூக விரோதிகள் என கூறினார் என அவர் முதலில் விளக்க வேண்டும். 13 பேர் உயிர் இழப்புக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். ஏன் கைது செய்யவில்லை?

    போராடும் மக்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு சுடுகாடு போல் ஆகும் என ரஜினி கூறி உள்ளார்.

    அவரது திரைப்படத்தில் போராடுவது போல் காட்சி வைத்து கொண்டு நிஜ வாழ்க்கையில் போராட கூடாது என்பது மாறுபட்ட கருத்து ஆகும். ரஜினியின் குரல் கார்ப்பரேட் குரலாக உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கலவரம் ஏற்பட்டு தலித்துகள் 2 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் நாட்டில் மாநில உரிமைக்காக போராடும் நிலையில் அதனை பற்றி கவலைப்படாமல் தலித் மீது தொடர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் போட்டி சட்ட மன்ற கூட்டம் நடத்தியது போராட்டத்தின் ஒரு வடிவம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவரை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மீது பல வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுசி கலையரசன், சித்தார்த், இலக்கியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதுதவிர அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது, மில்லர்புரத்தில் வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டது.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பு கலவரத்தில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் 4 ஆயிரம் பேர், வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாக சிவில் சப்ளை அதிகாரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் 1000 பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

    இதன் விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரு சில போலீசாரே தூத்துக்குடிக்கு வந்தனர்.

    நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தூத்துக்குடிக்கு இன்னும் வரவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போலீசார் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முழுவீச்சில் தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கும், மில்லர்புரத்தில் 2 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #ThoothukudiShooting
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அமைதியாக போராடி கொண்டு இருந்த மக்களிடையே மிகப்பெரிய கலவர சூழ்நிலை உருவாகி 13 உயிர்கள் பறிபோய்விட்டது. மத்திய அரசு துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கியதாக பொய்யான பிரசாரங்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம்.



    ஸ்டெர்லைட் ஆலையை பா.ஜனதா அப்போதே எதிர்த்தது. அந்த ஆலைக்கு எதிராக 95-96-ம் ஆண்டுகளில் பல போராட்டங்களை நடத்தினேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டேன். இந்த ஆலையை கொண்டு வர முழு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் தான்.

    ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ். மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஆகியோரும் இதற்கு அனுமதி வழங்கியதில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சொல்லி நடந்ததாக ராகுல்காந்தி கூறுகிறார். சோனியாகாந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் நடந்த துரோகங்கள் எண்ணில் அடங்காது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளன.

    கடந்த 99 நாட்களாக நடந்த போராட்டங்களில் எந்த சம்பவமும் நடக்காமல், 100-வது நாளில் கலவரம் எப்படி நடந்தது. இதில் பங்கேற்ற தீய சக்திகள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கு எந்த திட்டமும் வரக்கூடாது என்று சில கூட்டம் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக கூறிய போதும், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

    ஆஷ்துரைக்கு வீரவணக்கம் என்று ஆங்கிலேயருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆள்வதற்கு தமிழக அரசுக்கு தகுதி இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishnan #ThoothukudiShooting

    தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்த 44 போலீசார் நெல்லையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியானதுடன், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அதுபோல போராட்டம் நடத்தியவர்கள் கல்வீசி தாக்கியதில் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர். போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்த அனைவரும் தூத்துக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து காயம் அடைந்த போலீசார்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற உத்தரவிடப்பட்டது. நேற்று நடந்த கலவரத்தில் 10 பெண் போலீசார் உள்பட 44 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களில் தலையில் பலத்த காயம் அடைந்த எட்டயபுரம் எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு ஜெய்சங்கர் பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேரி ஜகிர்தா (41), சகாய ராபின் (26), சோபியா (25), நித்யா (25), சபுரா பானு (30), கிரேஸ் மரியம்மாள் (36), பிரியா (33), செல்வராணி (43), அஜிதா (40), ஆகிய 10 பெண் போலீசாரும், அருண் கிறிஸ்டோபர் (26), அருண்குமார் (26), மணிரத்னம் (25), மனோ (27), சத்திய மூர்த்தி (27) உள்பட 33 போலீசார் காயம் அடைந்து பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் இன்று காலை 20 போலீசார் சிகிச்சை முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். #SterliteProtest #PRPandian #BanSterlite
    மன்னார்குடி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தூத்துக்குடி கலவரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பேரழிவுகளை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு, போராட்டக்காரர்களோடு தமிழக முதல்வர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த அவசர கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


    தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதி வழி போராட்டத்திற்கு மதிப்பளிக்க தவறியதும், காவல் துறை மூலம் அடக்கு முறையை கையாண்டதுமே கலவரத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் வாழ்வதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் அணுகுமுறை மக்களுக்கு தொடர்ந்து கோபத்தை ஏற்படுத்தி வந்தது. ஆலை நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு மக்களை பிளவுப்படுத்தும் செயலில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இக்கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. #SterliteProtest #Thoothukudi #PRPandian #BanSterlite

    ×