search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான்"

    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • அசன் அவைஸ் 105 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் "பி" பிரிவில், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மல்லுக்கட்டின. "டாஸ்" வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆதர்ஷ் சிங் (62 ரன்), கேப்டன் உதய் சாஹரன் (60 ரன்), சச்சின் தாஸ் (58 ரன்) அரைசதம் அடித்தனர். உதிரியாக 17 வைடு உள்பட 20 ரன்கள் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமைல் ஹூசைன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடி இந்திய பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஷசாயிப் கான் 63 ரன்கள் திரட்டினார்.

    3-வது விக்கெட்டுக்கு அசன் அவைசும், கேப்டன் சாத் பெய்க்கும் கூட்டணி போட்டு அணியை சிக்கலின்றி இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

    பாகிஸ்தான் 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசன் அவைஸ் 105 ரன்களுடனும் (130 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சாத் பெய்க் 68 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

    2-வது லீக்கில் ஆடிய இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் நேபாளத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 73 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை சாய்த்தது. இதில் ஜம்ஷித் ஜட்ரனின் சதத்தின் (106 ரன்) உதவியுடன் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 262 ரன் இலக்கை நோக்கி ஆடிய நேபாளம் 40.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும்.

    • பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும்.
    • பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.

    இந்த நிலையில் நடப்பு உலக கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இரு நாடுகள் இடையே சீரற்ற உறவு, பகைமை உணர்வு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்வுபூர்வமாகி விடுவார்கள். ஏதோ தாங்களே விளையாடுவது போல் அவர்களின் ஆர்ப்பரிப்பும், சீற்றமும், ஆக்ரோஷமும் களத்தையே சூடாக்கி விடும். அதனால் தான் பரமஎதிரிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை இப்போதே உசுப்பேற்றி இருக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு அகமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் சூப்பர். பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.


    'ஸ்விங்' செய்வதில் வல்லவரான பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலியை தொடக்க கட்ட ஓவர்களில் சமாளிப்பது மிகவும் முக்கியம். அதை சாதுர்யமாக செய்து விட்டால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைவதற்கு வழிபிறக்கும். அத்துடன் யாராவது ஒருவர் செஞ்சுரி அடித்தால் 300-ஐ எளிதில் கடந்து விடலாம்.

    டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.

    கடந்த மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 128 ரன்னில் சுருட்டி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது நிச்சயம் இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும். மேலும், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. 7 முறை போட்டுத் தாக்கிய இந்தியா அந்த எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலக கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.

    அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலுசேர்க்கிறார்கள். 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.

    சரிசம பலத்துடன் இரு அணிகளும் கோதாவில் குதிப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.


    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பதால் நெருக்கடி முன்பை விட எகிறி நிற்கும். பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். அகமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

    இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்ட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார்.
    • பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 2 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இன்று முதல் 3-வது போட்டியில் ஆடுகின்றன.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலக கோப்பை என்பதால் மிக கூடுதலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    கடந்த மாதம் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா 228 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் (2018 முதல் கடந்த மாதம் வரை) இந்தியா 4-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். இதே போல விராட் கோலி தொடர்ச்சியாக 2-வது அரைசதத்தை அடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

    மேலும் கே.எல். ராகுலும் நல்ல நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஆப்கானிஸ்தானுடன் நேர்த்தியாக ஆடினார்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன்கில் முதல் 2 ஆட்டத்தில் விளையாடவில்லை. அகமதாபாத்தில் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் இடம் பெறுவாரா? என்பது உறுதியில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

    ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். அவர் 6 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர்கள் ஆப்கானிஸ்தானிடம் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கவனமுடன் பந்து வீசுவது அவசியமாகும்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நெதர்லாந்தை 81 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை சேஸ் செய்து உலக கோப்பையில் சாதனை படைத்தது.

    இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவாலாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி கடைசியாக லண்டன் ஓவல் மைதானத்தில் 2017-ம் ஆண்டு ஜூனில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்னில் தோற்கடித்து இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்தியாவை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சதம், அரை சதத்துடன் 199 ரன்கள் குவித்துள்ளார். அப்துல்லா ஷபீக் தனது முதல் உலக கோப்பை ஆட்டத்திலேயே சதம் அடித்து முத்திரை பதித்தார். இது தவிர சவுத் ஷகீல், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.

    கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பாபர் ஆசம் முதல் 2 ஆட்டத்திலும் மோசமாக ஆடினார்.

    பந்துவீச்சை பொறுத்தவரை ஹசன் அலி 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரிஸ் ரவூப் 5 விக்கெட் எடுத்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    1.30 லட்சம் பேர் அமரும் இந்த ஸ்டேடியத்தில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 7 ஆயிரம் போலீசாரும், 4 ஆயிரம் ஊர்காவல்ப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். ஸ்டேடியத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி தான் இந்த போட்டியை முதலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருநாள் முன்னதாக மாற்றப்பட்டது.

    • போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.
    • தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற 14-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 7 ஆயிரம் போலீசார் மற்றும் 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மைதானத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
    • மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை தொடங்கின.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர். இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    ஆனால், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனமழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகளவில் இருந்ததால் ரிசர்வ் டேவுக்கு போட்டி மாற்றம் செய்யப்பட்டது.

    நாளையும் மழை பெய்து போட்டி தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    இந்நிலையில், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.
    • போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், 3 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.
    • இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர்.

    கொழும்பு:

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது. இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.

    இது பற்றி விராட் கோலி கூறியதாவது:-

    அவர்களுடைய பலம் பந்துவீச்சு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் இருக்க வேண்டும்.

    நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு வருடமும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது.

    அதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.

    என்று கூறியுள்ளார்.

    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.
    • ஆசிய கோப்பைக்கான இறுதிப்போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

    பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

    இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை ஆகஸ்ட் 30-ம் தேதி எதிர்கொள்கிறது.

    ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், பரபரப்பை ஏற்படுத்தும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

    இதற்கிடையே, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், ஆசியகோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் லீக் கட்டத்தில் 4 ஆட்டங்கள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இருக்கும். இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது ஆட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

    2010-ம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லாவில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும்.

    பாகிஸ்தானில் அந்த அணி நேபாளத்துக்கு எதிராக மோதுகிறது. ஆப்கானிஸ்தான்-வங்கதேசம், வங்கதேசம்-இலங்கை மற்றும் இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆகியவை பாகிஸ்தானில் நடைபெறும் மற்ற 3 ஆட்டங்கள் ஆகும்.

    • இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய மோதல் என இந்தப் போட்டி குறித்து கேப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.

    வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு விளையாட வேண்டும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

    அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாடுவது இயலாத காரியமாக உள்ளது. அதனால், இந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

    இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×