search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச படங்கள்"

    • இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
    • ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்

    குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‛‛குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    • ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு.
    • ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங்.

    சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.

    நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.

    மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். 

    வழக்கு விசாரணையின்போது, "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்" என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

    மேலும், "90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

    அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்றது.

    • அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    போரூரில் பிரபல ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் அவர் அனுப்புவது போன்று ஏராளமான ஆபாசமான குறுஞ்செய்திகள் வாலிபர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

    மேலும் தோழியின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் ஆபாசமாக மாற்றி பதிவிடப்பட்டு இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். தென் சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி தெற்கு மண்டல சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் இளம்பெண் பணி புரியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இளம்பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக பதிவிட்டு பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்மாறனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் குவிந்து கிடந்தது. இதேபோல் தமிழ்மாறன் ஏராளமான பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி சாட்டிங் செய்து வந்து உள்ளார். இளம்பெண் சாட்டிங் செய்வது போல் வாலிபர்களை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் செக்ஸ் சாட்டிங் செய்து ரசித்து இருக்கிறார். இவரது இந்த விபரீத ஆசையால் தற்போது போலீசில் சிக்கி கொண்டார்.

    தமிழ்மாறன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    ஆபாச சாட்டிங் செய்து அவரது வலையில் வீழ்ந்தவர்களிடம் பணம் பறித்து உள்ளாரா? உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.
    • கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பாக கேரள போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இவர்கள் சைபர்கிரைம் போலீசாருடன் இணைந்து குழந்தைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்போர் மற்றும் அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் குறித்த தகவலை சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 449 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.

    அவர்களில் 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் ஐ.டி. ஊழியர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
    • விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்.

    புது டெல்லி:

    ரெயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலாக வைஃபை சேவை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு ரெயில் நிலையங்களில் வைஃபை அமைக்கப்பட்டு இதுவரையில் சுமார் 6,100 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வைஃபை சேவை பெரும்பாலும் ஆபாச வீடியோக்களை பார்க்கவும், ஆபாச வீடியோ டவுன்லோடு செய்யவும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தனியார் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களில்தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ரெயில் நிலையங்களுக்கு இணைய சேவை வழங்கும் ரெயில்டெல்லின் தகவலின்படி, செகந்திராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வைஃபையில் 35% ஆபாசப் படங்கள் டவுன்லோடு செய்யவே பயன்பட்டு வருவதாகதெரியவந்துள்ளது. அந்த ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ரெயில் டெல் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணிசமான எண்ணிக்கையிலான வைஃபை சேவைகள் ஆபாச வீடியோ டவுன் லோடு செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்களை அணுக முடியாத நிலையில், விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

    ×