search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zoo"

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் ஊசுட்டேரி அருகே உள்ள போகோ லேண்ட் வளாகத் தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கருடா என்ற பெயரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு உள் ளது.
    • விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் ஊசுட்டேரி அருகே உள்ள போகோ லேண்ட் வளாகத் தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கருடா என்ற பெயரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு உள் ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு உயிரியல் பூங்காவை திறந்து வைத்து, அங்குள்ள பறவைகள், விலங்குகளை பார்வை யிட்டார்.

    விழாவில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, ஆச்சாரியா கல்விக்குழும தலைவர் அரவிந்தன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 'குழந்தைகளை கவரும் வகையில் அரிய வகை சிறிய விலங்குகள், பறவைகள், வண்ண மீன்கள், பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவை உள்ளன. சிறப்பம் சங்களாக குதிரை, ஒட்டகம், நெருப்புக்கோழி, பஞ்சவர்ண கிளி வகைகள், வெளிநாட்டு புறாக்கள், நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் வண்ண வாத்துகள், பலவகையான கோழிகள், முயல், ஆமை உள்ளிட்டவைகளும் உள்ளன.

    • இந்த ஆண்டு முதல் வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கிரீன் மிஷின் திட்டத்தின் கீழ் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    சேலம்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருக்கும் விலங்குகள் முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கிரீன் மிஷின் திட்டத்தின் கீழ் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    குரும்பபட்டி வன உயிரியல் பூங்கா 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதனை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 31.73 ஹெக்ஆடேராக க உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா 131.73 ஹெக்டேராக விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    கூடுதலாக வன உயிரினங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 24 வகையான உயிரினங்கள் தற்போது இங்கு உள்ளது.

    புலி, சிறுத்தை, கரடி, நீர்பறவை உள்ளிட்டவை இந்த ஆண்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளன. 2019-20 -ம் ஆண்டில் இரண்டரை லட்சம் பேர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை பார்வையிட்டனர். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 87 ஆயிரம் பேர் மட்டும் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் குரும்பபட்டி ஊரியல் பூங்காவுக்கு வந்துள்ளனர்.

    உயிரியல் பூங்காக்களை மேம்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. இருப்பினும் கல்விக்காகவே தமிழக அரசு உயிரியல் பூங்காக்களை மேம்படுத்தி வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதி உட்பட பல்வேறு வனப்பகுதி வெளியில் இருந்து யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பரப்பை அதிகரிக்கும் போது நிச்சயம் வனவிலங்குகள் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு வராது.

    மாவட்டத்திற்கு 3 சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே வனப்பகுதியில் தற்போது சாலைகள் போடப்படுகிறது. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் கட்டாயம் அகற்றப்படும். முட்டல் ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உயிரியல் பூங்காவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×