search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "words sow hope"

    • எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசுவது ஒருவகை பயிற்சி கலை.
    • கற்றவர்கள் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சி மணம் பரப்பும்.

    நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளுக்கு, தனி சக்தி இருக்கிறது. உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக பேசும் நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் மருந்துக்கு இணையானவை.

    மருத்துவ உலகமே வியக்கும் அளவிற்கு உடல் பலவீனமான நிலையில் இருந்தவர்களை அன்பும், ஆறுதலும் மீட்டெடுத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மருத்துவம் கைவிடும் நிலையில் இருந்தவர்களை நம்பிக்கையான ஆறுதல் வார்த்தைகள் காப்பாற்றி இருக்கிறது.

    எத்தகைய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தாலும் மனதில் நம்பிக்கை ஏற்படுமானால் அது மருந்தை விட வேகமாக வேலை செய்யும்.

    உடலுக்கும் மனதிற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. மனம் நல்ல நிலையில் இருந்தால் அதுவே ஆரோக்கியத்தை மீட்டெடுத்து கொடுத்துவிடும். அதனால்தான் அதனை முக்கிய பயிற்சியாகவே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுக்க வேண்டி இருந்தால் அவர்களுக்கு தேவை மருந்து மட்டுமல்ல, அன்பாக வார்த்தைகளும் கூட. இதனை `யூனிவர்சல் ரெமிடி' என்று அழைப்பார்கள்.

    பிரபஞ்சத்தில் சுழன்றுக்கொண்டிருக்கும் நல்ல சக்திகள் நம் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு நம்மை நோக்கி வரும். நம்மிடம் இருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள் அவைகளை பலப்படுத்தும். பிறகு அது செயலாகும். இதுவே பிரபஞ்ச இயக்கம். இதனை செயல்படுத்தி பார்த்தால் நன்மைகள் விளையும். அதேவேளையில் எதிர்மறையாக பேசும் வார்த்தைகளும் இதுபோன்ற ஒரு இயக்கத்தை தோற்றுவிக்கும்.

    சுற்றி இருப்பவர்கள் பேசும் நல்ல வார்த்தைகள் கேட்பவர்களின் மனதுக்குள் நல்ல எண்ணங்களை தோற்றுவிக்கும். அது மகிழ்ச்சியாக மாறும். அந்த மகிழ்ச்சி மனதுக்குள் அதிர்வு அலைகளை ஏற்படுத்தும். இந்த அலைகள் பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டிருக்கும் அதேபோன்ற அலைகளை ஈர்க்கும். அது பல மடங்காகும்போது அதற்கென தனி சக்தி பிறக்கும். அந்த சக்தி நம் எண்ணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் என்கிறது விஞ்ஞானம்.

    மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் ஒவ்வொருவரையும் வீட்டிற்கு அனுப்பும் முன்பாக அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள்.

    நோய்வாய்ப்பட்டு உடலளவில் பலவீனமான நிலையில் இருப்பவர்களை எப்படி நடத்த வேண்டும்? அவர்களிடம் எப்படி பேசவேண்டும்' என்பது பற்றி தெளிவாக விளக்குகிறார்கள்.

    நோய்க்காக சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை விட ஆறுதலாக பேசும் வார்த்தைகள்தான் அவருடைய உடல் நலனுக்கு பலம் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை புரியவைக்கிறார்கள்.

    நோயாளிகளிடம் வீட்டில் உள்ளவர்கள் நன்கு உபசரிப்பு காட்டினால் அது உடல் நலனை மேம்படுத்தும். நோயாளிகளிடம் அவருடைய நலம் விரும்பிகள் நடந்து கொள்ளும் முறைதான் அவர்களை விரைந்து குணப்படுத்தும். அதுதான் யதார்த்தம்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கப் போனாலும், அவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளை பேசவேண்டும். மருத்துவமனை சூழ்நிலை அவர்களை மனரீதியாக பாதிக்க வைத்திருக்கும். அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்களுக்குள் எட்டிப்பார்க்கும். அதனால் அவர்கள் பலவீனமடைந்து சோர்ந்து காணப்படுவார்கள். அது போன்ற சமயத்தில் நோயாளிகளிடம் பேசும் நல்ல வார்த்தைகள் அவர்களை குணமடையச் செய்யும். தேவையில்லாத வார்த்தைகளைப் பேசி அவர்களை மேலும் பலவீனப்படுத்திவிடக்கூடாது.

    எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசுவது ஒருவகை பயிற்சி கலை. இந்த பயிற்சி நல்ல ஆற்றலை உருவாக்கும். அதனை கற்றவர்கள் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சி மணம் பரப்பும்.

    ×