என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LABORER DIES"
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.
- தகர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சொக்கலிங்கபுரம் நாகம்மையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஹரிகரன் (வயது 22). இவர் பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் புதிதாக பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதற்காக மேலே தகர கொட்டகை அமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
நேற்று இரவு பணி முடித்து விட்டு ஹரிகரன் தகர கொட்டகையின் மேலே இருந்து கீழே இறங்க முயன்ற போது பால் பண்ணையின் மின் விளக்கின் இரும்பு கம்பியை பிடித்துள்ளார். நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அந்த இரும்பு கம்பி நனைந்து, அதில் மின் கசிவு இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் ஹரிகரன் இரும்பு கம்பியை பிடித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விட்டு ஹரிகரனை மீட்டு சிகிச்சைக்காக அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ஹரிகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஹரிகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலை சக தொழிலாளர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்