search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala thief"

    கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் திருடியதாகவும், செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் கொள்ளையன் கடிதம் எழுதியுள்ளான்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பரியாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை வலைவீசி தேடி வந்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த அ‌ஷரப் என்பவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய், ஒரு சவரன் நகை திருட்டு போனது. இந்த நிலையில் அ‌ஷரப் குடும்பத்தினர் நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தனர்.

    அப்போது வாசலில் 3 பெரிய கவர்கள் இருந்தன. அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம், 4.5 பவுன் தங்க செயின், 630 மில்லி கிராம் கம்மல், மோதிரம் உள்ளிட்டவையும், ஒரு கடிதமும் இருந்தன.

    அ‌ஷரப் குடும்பத்தினர் அந்த கடிதத்தை பிரித்து படித்தனர். அதில், ‘‘கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் நான் திருடிவிட்டேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். எந்தெந்த வீடுகளில் என்னென்ன பொருட்கள் திருடினேன் என்பதை இந்த கடிதத்தில் விவரமாக எழுதி வைத்துள்ளேன். தயவு செய்து அந்தந்த வீடுகளில் அவர்களுக்கு உரிய பொருட்களை கொடுத்துவிடுங்கள்’’ என்று கூறப்பட்டிருந்தது.

    அவை அனைத்தும் பரியாரம் பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டுபோன பணம் மற்றும் நகைகள் ஆகும். அந்த பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் மனம் மாறி அவற்றை அ‌ஷரப் வீட்டின் வாசலில் வைத்து சென்றுள்ளான்.

    இதைதொடர்ந்து அ‌ஷரப், அந்த பணம் மற்றும் நகைகளையும் அதில் இருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.


    கேரளாவில் வீடு புகுந்து திருடிய நகைகளை திருடன் மன்னிப்பு கடிதம் எழுதி மீண்டும் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே அம்பலப்புழா கருமாடி என்ற இடத்தைச் சேர்ந்த மதுக்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.

    பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை யாரோ திருடிச் சென்றிருந்தனர்.

    இது பற்றி மதுக்குமார் அம்பலப்புழா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய திருடனை தேடி வந்தனர். இதற்கிடையில் திருட்டு நடந்து 2 நாட்கள் கடந்த நிலையில் திருட்டு நடந்த வீட்டின் முன்பு காலையில் பார்த்த போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    வீட்டின் முன்பு ஒரு பார்சலும், அதன் அருகே கடிதம் ஒன்றும் இருந்தது. பார்சலை பிரித்து பார்த்த போது அதில் அவர்கள் வீட்டில் திருடப்பட்ட நகைகள் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அந்த கடிதத்தை நகைகளை திருடிச்சென்ற திருடனே எழுதி இருந்தான். அந்த கடிதத்தில் என்னை மன்னிக்க வேண்டும். எனது கஷ்ட நிலை காரணமாக உங்கள் வீட்டில் திருடி விட்டேன். திருடி விட்டு எனது வீட்டிற்கு சென்ற பிறகு எனக்கு தூக்கமே வரவில்லை. நிம்மதி இழந்த நிலையில் காணப்பட்டேன். எனவே மீண்டும் நகைகளை உங்களிடமே ஒப்படைக்கிறேன். மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு.... என்று எழுதப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து மதுக்குமார் அந்த நகைகளுடன் அம்பலப்புழா போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை கூறினார். மேலும் திருடன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார்.

    நடந்த விவரங்களை கேட்ட போலீசார் நகைகளை திருடிய திருடனே மீண்டும் நகைகளை ஒப்படைத்தாலும் அந்த திருடன் யார் என்பதை கண்டு பிடிக்க தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று கூறி உள்ளனர்.

    ×