search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalaigmnar Centenary Celebration"

    • பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் நிகழ்ச்சி.
    • நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் புவி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தி ஆக்சிஜனை அதிகப்படுத்தவும் பொன்னேரி பழவேற்காடு ஏலியம்பேடு சாலை ஓரங்களில் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×