search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunachal Pradesh"

    அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை அம்மாநில முதல்வர் பேமா காண்டு இன்று துவக்கி வைத்துள்ளார். #ArunachalPradesh #SolarPlant
    இடாநகர்:

    அருணாச்சல பிரதேசத்தில் 8.50 கோடி ரூபாய் செலவில் அம்மாநில ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தால் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையை அம்மாநில முதல்வர் பேமா காண்டு இன்று தொடங்கி வைத்தர்.

    துவக்க விழாவில் பேசிய முதல்வர் பேமா காண்டு, “நமது நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருக்கவேண்டும், மற்ற மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பிடும் போது, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத சோலார் மின் உற்பத்தி ஆலை சிறந்த ஒன்று” என குறிப்பிட்டு பேசினார். #PemaKhandu #ArunachalPradesh #SolarPlant
    ×