என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » amaravati river
நீங்கள் தேடியது "Amaravati river"
கரூர் அருகே அமராவதி ஆற்றில் சிக்கிய பிளஸ்-2 மாணவரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்:
கரூர் திருமாநிலையூரை அடுத்த செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செல்வி, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஹரி (வயது 17). பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்காக தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று மதியம் ஹரி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது ஆற்றின் மையபகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டு அப்பகுதி பொதுமக்களை அழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்களில் சிலர், ஆற்றில் குதித்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே ஓடும் நீரில் மாணவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாமா? என சந்தேகமடைந்த தீயணைப்பு வீரர்கள் திருமாநிலையூர் புதிய அமராவதி பாலம் மற்றும் கரூர் ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களிலும் தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் எங்கு தேடியும் ஹரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். ஹரியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, ஹரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) கணேசன் மற்றும் நிலைய அலுவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாலை முதலே தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மித வைகள் மூலமும் சென்று தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஹரியின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.
அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் ஹரி, எங்காவது கரையோரத்தில் ஒதுங்கியிருக்கலாமா? அல்லது ஏதாவது இடத்தில் சிக்கியிருக்கலாமா? என்று தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரம் மகன் ராஜகுமாரன் (24). இவர் கரூரில் டெய்லராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் மரவாபாளையம் சென்ற அவர், அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி மறு கரையில் உள்ள அக்கரை கருப்பம்பாளையத்திற்கு செல்ல முயன்றார். அப்போது தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில் கட்டிப்பாளையம் காவிரி ஆற்றில் டி.என்.பி.எல். பம்ப் ஹவுஸ் அருகே அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #Tamilnews
கரூர் திருமாநிலையூரை அடுத்த செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செல்வி, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஹரி (வயது 17). பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்காக தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று மதியம் ஹரி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது ஆற்றின் மையபகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டு அப்பகுதி பொதுமக்களை அழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்களில் சிலர், ஆற்றில் குதித்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே ஓடும் நீரில் மாணவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாமா? என சந்தேகமடைந்த தீயணைப்பு வீரர்கள் திருமாநிலையூர் புதிய அமராவதி பாலம் மற்றும் கரூர் ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களிலும் தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் எங்கு தேடியும் ஹரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். ஹரியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, ஹரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) கணேசன் மற்றும் நிலைய அலுவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாலை முதலே தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மித வைகள் மூலமும் சென்று தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஹரியின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.
அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் ஹரி, எங்காவது கரையோரத்தில் ஒதுங்கியிருக்கலாமா? அல்லது ஏதாவது இடத்தில் சிக்கியிருக்கலாமா? என்று தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரம் மகன் ராஜகுமாரன் (24). இவர் கரூரில் டெய்லராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் மரவாபாளையம் சென்ற அவர், அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி மறு கரையில் உள்ள அக்கரை கருப்பம்பாளையத்திற்கு செல்ல முயன்றார். அப்போது தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில் கட்டிப்பாளையம் காவிரி ஆற்றில் டி.என்.பி.எல். பம்ப் ஹவுஸ் அருகே அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #Tamilnews
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம்:
இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சிவகாசியில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தாராபுரம் அருகே வந்தபோது அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதை பார்த்த அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவியரசன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர்.
அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் இதுகுறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வாலிபரை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு வரை தேடியும் கவியரசனை மீட்க முடியவில்லை. தொடர்ந்து இன்று காலை முதல் தேடுதல் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் நீச்சல் வீரர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கவியரசன் உடல் சிக்கியது. அதனை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X