என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Warrant Lalu
நீங்கள் தேடியது "Warrant Lalu"
ஐஆர்சிடிசி ஹோட்டல் முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை ஆஜர்படுத்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்விக்கு ஜாமீன் வழங்கியது. #IRCTCScamCase #LaluPrasadYadav
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஐஆர்சிடிசி ஓட்டல் முறைகேடு வழக்கில் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் கோரி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம், ராப்ரிதேவி, தேஜஸ்வி உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம், லாலு பிரசாத் யாதவை அக்டோபர் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தும்படி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத்துக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் நேற்று சரண் அடைந்து, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #IRCTCScamCase #LaluPrasadYadav
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத்துக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் நேற்று சரண் அடைந்து, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #IRCTCScamCase #LaluPrasadYadav
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X