என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tanjore doctor struggle"
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் நடந்த போராட்டத்தில் 300 மருத்துவ மாணவர்கள் மற்றும் 200 டாக்டர்கள் பங்கேற்றனர். இன்று முதல் வரும் 3-ந்தேதி வரை இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறுகையில்;
வருகிற 5-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தமிழக அரசு மருத்துவ கூட்டு நடவடிக்கை குழுவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பது. வருகிற 20-ந்தேதி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடக்கிறது. 27-ந்தேதி ஒத்துழையாமை இயக்க போராட்டம் நடத்தப்படும். மேலும் அன்று வகுப்புகளை புறக்கணிப்பது. அரசுக்கு மருத்துவமனை பதிவுகளை அனுப்பாமல் முடக்குவது. இந்திய கவுன்சில் ஆய்வை புறக்கணிப்பது. வருகிற செப்.12-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தப் படும். செப்.21-ந்தேதி பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார். இந்த பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்துக்கு தமிழக அரசு மருத்துவ கூட்டு நடவடிக்கை குழுதலைவர் டாக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ரா£ஜந் திரன், பொருளாளர் டாக்டர் வினோத் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 1000 டாக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்