search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddha Hospital"

    • கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை முகாம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை கோகிலா சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெயவெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், இந்திய மருத்துவ நல அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச விழித்திரை பரிசோதனை முகாமை நாளை (சனிக்கிழமை) நடத்த ஏற்பாடு செய்துள்ளது. கோகிலா சித்த மருத்துவமனையில் நடைபெறும் இந்த முகாம் காலை 9 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கும். டாக்டர்கள் ஜெயவெங்கடேஷ், பவித்ரா, சுபலெட்சுமி, பிரியங்கா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளிக்க உள்ளனர். ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு பார்வை திறன் குறைபாடு, கண் நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கு பெற விரும்புவோர் நிர்வாக அலுவலர் செந்தில்நாதனை 90030 00251 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கோகிலா சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெயவெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    ×