search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rangasamy congratulated"

    • நாட்டின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • புதுவை மக்களின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும் வெகுமக்களின் நலன் காப்பதிலும் உறுதுணையாக இருப்பார்.அவருக்கு எனது சார்பிலும் புதுவை மக்களின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு ரங்கசாமி கூறியுள்ளார்.

    அமைச்சர் லட்சுமிநா ராயணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்ய சபாவின் பதவிக்காலத் தலைவராகவும் இருக்கும் உங்கள் சகாப்தம் நமது ஜனநாயகத்தை புதிய பாதையில் கொண்டு செல்லும் . எம்.பி.யாகவும், பிற அரசியல் சட்டப் பதவிகளிலும் உங்களின் செழுமையான அனுபவம் இந்த நாட்டு மக்களின் இதயங்களை வெல்ல உதவும்.

    புதுவை மக்கள் மற்றும் எனது சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    ×