search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajavelu participated"

    • நாட்டின் 75 -வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அதன் தொடக்க நாளாக நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்று விழா நடைபெற்றது

    புதுச்சேரி:

    நாட்டின் 75 -வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடக்க நாளாக நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    துணை முதல்வர், ஆஷா ராணி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் நூர் முகமது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நெட்டப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வும் துணை சபாநாயகரருமான ராஜவேலு கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மழை அங்கி வழங்கினார். நிகழ்ச்சியை சாமுண்டீஸ்வரி தொகுத்து வழங்கினார்.

    இறுதியாக உடற்கல்வி விரிவுரையாளர் ரஷீத் அகமது நன்றிகூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை விரிவுரையாளர் கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் மற்றும் சித்தானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×