என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Rajasthan Police
நீங்கள் தேடியது "Rajasthan Police"
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் கான்டபிள் வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஆல்வார்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் கடந்த மாதம் 26-ம் தேதி தன் கணவனுடன் சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. கணவன் கண்முன்னே நடந்த இந்த கொடுமையை மற்றொருவன் வீடியோ எடுத்துள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை முதலில் வாங்க மறுத்த காவல்துறை, தாமதமாக புகாரை பதிவு செய்தது.
இதற்கிடையே பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோ பதிவை, கடைசி குற்றவாளி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால், பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அனைத்து தலைவர்களும் குரல் கொடுத்தனர். குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6 குற்றவாளிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை வழங்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான பணி நியமன ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணி நியமன உத்தரவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் அவருக்கு பணி நியமனம் தொடர்பான கடிதம் வழங்கப்பட்டு, பணியில் சேர்க்கப்படுவார் என கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X