search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RECOVERED AS DEAD BODY"

    • மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
    • கொலையா என போலீசார் விசாரணை

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் கணேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இது தொடர்பாக அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாயமான ஜெயசீலன் திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் காவேரி பாலத்தின் அருகாமையில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து திருச்சி கிழக்கு சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகை, கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை மர்ம நபர்கள் அடித்து கொன்று உடலை அங்கே வீசி சென்றார்களா? அல்லது தற்கொலை ஏதும் செய்து கொண்டாரா? என பல கோணங்களில் சப் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×