search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police selection"

    போலீஸ் தேர்வு முடிவில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இல்லாததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சீருடை பணியாளர் தேர்வு எழுதிய இளைஞர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் காவல் துறையினர் வாரிசுகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் இந்த ஆணை வழங்கப்பட்டு இதற்கான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட எஸ்.பி. அனுமதியுடன் சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமத்துக்கு அனுப்பப்பட்டது.

    கடந்த மார்ச் 11-ந் தேதி தேர்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் வெளியிடப்பட்டு அதற்கான தரவரிசைப்பட்டியல் ஆகஸ்ட்டு 11-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காவல்துறை வாரிசுகளுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்துக்கும் பெரும் ஏமாற்றமும் மன உளைச்சலாகவும் அமைந்துள்ளது.

    ஏனெனில் கடந்த 1 வருடமாக இதற்கான பயிற்சியை முழு நம்பிக்கையுடன் மேற்கொண்டு இருந்த நிலையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்ட ஆணையின்படி 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    சிறுநீர் மாதிரியை எடுத்து கர்ப்பமாக இருக்கிறோமா? என்று தங்களை பரிசோதித்ததாக போலீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவிகள் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசில் சேர்பவர்களுக்கான தகுதி விபரங்களை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த அக்டோபர் மாதம் மாற்றி அறிவித்தார். அதில் பெண்களுக்கான உயரம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை.

    இந்த நிலையில், பெண்களுக்கான உயரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என கடந்த 13-ந் தேதி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் காங்கிரஸ் தலைவர் திப்திசிங் மற்றும் கமல்நாத் வீட்டிற்கு சென்றார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினார்கள்.

    “நாங்கள் கிரிமினல்கள் போன்று நடத்தப்பட்டோம். முதலில் போலீசார் எங்களை வேனில் ஏற்றினார்கள், போபாலுக்கு மூன்று மணி நேரங்கள் பயணித்தோம். எங்களுடைய செல்போன்களை பறித்துக்கொண்டார்கள். எங்களுடைய பெற்றோர்களிடம் பேச அனுமதிக்கவில்லை. நாங்கள் சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டோம். நாங்கள் சிறைக்கு சென்றதும், நாங்கள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம், நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது என தெரியும். நாங்கள் இருந்த அறைக்குள் ஆண்களும் நுழைந்தார்கள்,” என குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து உள்ளார்கள்.
    ×