search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger ship"

    • வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
    • டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பணிகள் விரைவாக நடந்து வரும் வேளையில் வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது. இதனால் நாகப்பட்டினம் துறைமுகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.

    இந்த குழுவினர் பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை கருவி, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை சோதனை செய்யும் கருவி, உடமைகளை பாதுகாப்பாக வைப்பது என அனைத்திற்கும் தனித்தனியாக பிரம்மாண்டமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி துறைமுகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இதற்கான டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஒரு பயணி இலவசமாக 50 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்து செல்ல முடியும். இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் செய்யது ஹாசிப் ஜூஹைர் கூறினார்.

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் வருகிற 10-ந் தேதி காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த கப்பலின் சோதனை ஓட்டமானது இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கி நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 14 அதிகாரிகள் கப்பலில் பயணம் செய்தனர். இது மீண்டும் இன்று இலங்கைக்கு திரும்பி வர உள்ளது. இதேபோல், நாளை சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது. துறை சார்ந்த பணிகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
    • அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசு துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு பிறகு அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

    இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    ×