என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Parents Threatens
நீங்கள் தேடியது "Parents Threatens"
பெற்றோர் மிரட்டலையடுத்து திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர்:
வியாசர்பாடியில் வசித்து வந்தவர் அக்னிராஜ். திண்டிவனத்தை சேர்ந்த இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.
இவருக்கும் எதிர்வீட்டில் வசித்த பிரபாவதி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வள்ளலார் நகரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்தநிலையில் பிரபாவதியின் பெற்றோர் காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி காதல்ஜோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி காதல் திருமணம் செய்தவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவொற்றியூர் உதவி ஆணையாளர் தேன்தமிழ் வளவன் உத்தரவின் பேரில் பெரிய மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனியாக நியமிக்கப்பட்டு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை காதல் ஜோடியின் வீட்டிற்கு சென்று பட்டா புத்தகத்தில் கையெழுத்திட்டு வருகிறார். மேலும், ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக காவல் நிலையத்துக்கு போன் செய்ய வேண்டும் எனவும் காதல் ஜோடிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
வியாசர்பாடியில் வசித்து வந்தவர் அக்னிராஜ். திண்டிவனத்தை சேர்ந்த இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.
இவருக்கும் எதிர்வீட்டில் வசித்த பிரபாவதி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வள்ளலார் நகரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்தநிலையில் பிரபாவதியின் பெற்றோர் காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி காதல்ஜோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி காதல் திருமணம் செய்தவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவொற்றியூர் உதவி ஆணையாளர் தேன்தமிழ் வளவன் உத்தரவின் பேரில் பெரிய மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனியாக நியமிக்கப்பட்டு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை காதல் ஜோடியின் வீட்டிற்கு சென்று பட்டா புத்தகத்தில் கையெழுத்திட்டு வருகிறார். மேலும், ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக காவல் நிலையத்துக்கு போன் செய்ய வேண்டும் எனவும் காதல் ஜோடிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X