search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New bus station opening"

    • மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
    • நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

    வேலூர் :

    வேலூர், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வருகிற 29,30-ந் தேதிகளில் நடைபெற உள்ளன.

    இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணியளவில் ஆம்பூருக்கு வருகிறார்.

    தொடா்ந்து, அவா் நாளை காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

    பின்னர் வேலூர் வருகிறார். மதியம் 12 மணிக்கு விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.

    புதிய பஸ் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது.மேலும் திறப்பு விழாவையொட்டி பஸ் நிலையம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    இன்று காலையில் புதிய பஸ் நிலையத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    சாலைகள் பளிச்சென காணப்படுகின்றன

    முதல்அமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகம் மாவட்ட மற்றும் மாநகர திமுக அலுவலகங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.முதல்அமைச்சர் வருகையை யொட்டி வேலூர் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன.

    ×