search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle combustion"

    • திருபுவனை அருகே பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்து மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
    • திருபுவனை பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கராத்தே முருகன் (வயது 41). இவர் திருபுவனை தொகுதி பா.ஜனதா தலைவராக உள்ளார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்து மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    திருபுவனை அருகே திருபுவனை பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கராத்தே முருகன் (வயது 41). இவர் திருபுவனை தொகுதி பா.ஜனதா தலைவராக உள்ளார். இவர் மதகடிப்பட்டு பஸ்நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் திருபுவனை தொகுதி செயற்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த ஷர்மா மற்றும் அவருடன் வந்த 6 பேர் மது போதையில் கராத்தே முருகனையும் அவரது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் உன்னை வீட்டிலேயே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கரேத்தே முருகன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். நள்ளிரவு திடீரென மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்தது.

    இதையடுத்து கராத்தே முருகன் திருபுவனை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் எனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×