என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Modi Survey
நீங்கள் தேடியது "Modi Survey"
கேரள மாநிலத்தில் அடைமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். #KeralaRains #KeralaFloods #ModiSurvey
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநில வெள்ள நிலவரங்களை கேட்டறிந்தார். அத்துடன், டெல்லியில் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் வெள்ள பாதிப்பு குறித்து கேரள ஆளுநர் மற்றும் முதல்வருடன் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர், கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து சிறிது நேரத்தில் வானிலை சீரானதால், ஹெலிகாபடர் மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளை மோடி பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி அல்போன்ஸ் ஆகியோர் உடன் சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு விளக்கினர். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #ModiSurvey
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான உபரிநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநில வெள்ள நிலவரங்களை கேட்டறிந்தார். அத்துடன், டெல்லியில் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார். அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மீண்டும் கொச்சிக்கு திரும்பி தரையிறங்கியது. வானிலை சீரடைந்ததும் மோடி, வெள்ள பாதிப்புகளை பார்வையிட முடிவு செய்யப்பட்டது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் வெள்ள பாதிப்பு குறித்து கேரள ஆளுநர் மற்றும் முதல்வருடன் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர், கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து சிறிது நேரத்தில் வானிலை சீரானதால், ஹெலிகாபடர் மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளை மோடி பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி அல்போன்ஸ் ஆகியோர் உடன் சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு விளக்கினர். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #ModiSurvey
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X