search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage Woman Missing In Minjur"

    மீஞ்சூர் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென்று மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சசி (20). பி.எஸ்.சி. படித்து உள்ளார்.

    சசிக்கும் உறவினர் ஒருவரது மகனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் அடுத்தமாதம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோர் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சசி பின்னர் திரும்பி வரவில்லை. மேலும் வீட்டில் இருந்த 10 பவுன் நகை, படிப்பு சான்றிதழ்களும் மாயமாகி இருந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சசி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அவரை யாரேனும் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    ×