என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MAHALINGA SIDDHA LORD GURU PUJA"
- எளம்பலூரில் மகாலிங்க சித்தர் பெருமான் குருபூஜை நடைபெற்றது.
- 210 மகா சித்தர்கள் யாகத்துடன் நடந்தது.
பெரம்பலூர்:
எளம்பலூர் சமத்துவபுரத்தில் உள்ள மகாலிங்க சித்தர் சன்னதியில் மகாலிங்க சித்தர் பெருமான் குருபூஜை விழா ரோகிணி மாதாஜி தலைமையில் தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ் (எ) நந்நிபாபா முன்னிலையில் 210 மகா சித்தர்கள் யாகத்துடன் நடந்தது.
பின்னர் உலக நன்மை கருதி கோபூஜை, 210 சித்தர்கள் நாமாவளி புஷ்பா அர்ச்சனையும், சிறப்பு ருத்ர ஜபஹோம அபிஷேக வழிபாடும், கலச அபிஷேகம், மகாதீபாரதனையும் நடந்தது. திருச்சி ஆகமப்பிரவீன் கயிலை சிவஸ்ரீ தெய்வசிகாமணி சிவாச்சாரியார் குழுவினர் ருத்ர ஜெப ஹோமம் நடத்தினர். தொடர்ந்து மாணிக்கவாசகர் குருபூஜை விழாவும் நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்த்திரதானமும், பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தாளாளர் சிவசுப்பிரமணியம், செயலாளர் விவேகானந்தன், சென்னை தொழிலதிபர் வெற்றிமாறன், டாக்டர் ராஜசிதம்பரம், கருங்குழி கிஷோர்குமார், அரசு வக்கீல் சுந்தரராஜன், ராதா மாதாஜி, தயாளன் சுவாமிகள், ஒய்வு பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்