என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "land fraud case"
- போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
- சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றுள்ளனர்.
புதுச்சேரி;
போலியாக நில ஆவணம் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43).வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன்,சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றுள்ளனர்.
இதனையறிந்த ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை 2 ஆண்டுகளாக வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் ஆரோக்கியராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் கோர்ட்டின் அனுமதி பெற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பணத்தில் கார்,மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும்,மீதி பணத்தை செலவழித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் மற்றவர்களை பிடிக்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் செல்லஞ்சேரி காரணப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த குமரனை (51) அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பணத்தில் கடலூரில் 10 ஏக்கர் நிலமும்,புதுவையில் போலியான முகவரி கொடுத்து 3.600 சதுர அடி நிலமும் வாங்கியுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்து போனார். இதில் முக்கிய குற்றவாளியான நான்சி நாகசுந்தரி உள்பட 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்