என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gang fired"
- மினிவேன் வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள கொழுமம்கொண்டான் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கேசவன்(28). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சொந்தமாக மினிவேன் வாங்கினார். அந்த வாகனத்தை நேற்று இரவு தனது வீட்டு முன்பு நிறுத்திவிட்டு சென்றார். இன்று காலையில் பார்த்தபோது அந்த வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்றது தெரியவந்தது.
இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கேசவன் சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கேசவன் புதிதாக மினிவேன் வாங்கியதால் அதேபகுதியை சேர்ந்த ஒருசிலர் தங்களுக்கு வருமானம் குறைந்துவிட்டது என்று தெரிவித்து வந்துள்ளனர்.
எனவே தொழில்போட்டி காரணமாக வேனுக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அைடந்துள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் உதவியுடன் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்