search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona Ward"

    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரேனா ெதாற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • அரசு ஆஸ்பத்திரயில் உள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில் 15 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் முன்கூட்டியே வாங்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனிடையே சீனாவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகரை சேர்ந்த அவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் விமானத்தில் வந்த 70 பேர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புத்தாண்டு கெர்ணடாட்த்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. பொதுஇடங்களில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூகஇடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரேனா ெதாற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தன்ர. நேற்று மாலை ஒருவரும், இன்று காலை ஒருவரும் என குணமடைந்து வீடு திரும்பினர்.

    ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்யசயில் உள்ளார். இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரயில் உள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில் 15 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களும் தயார்நிலையில் உள்ளனர்.

    மருத்துவர்கள் , பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    • அவசர கால ஒத்திகை நடந்தது
    • மருந்து இருப்பு, வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவைகள் உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு

    வேலூர்:

    கொரோனா தொற்று மீண் டும் பரவி வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு கள் அனைத்து மருத்துவம னைகள் மற்றும் ஆரம்ப சுகா தார நிலையங்களில்கொரோ னாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத் திருக்க உத்தரவிட்டுள்ளன.

    மேலும், கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச் சைக்கு வந்தால், அவர்களை எவ்வாறு கையாள்வது என் பது குறித்து ஒத்திகை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத் துவமனையில் நேற்று நடந் தது.

    அதன்படி, வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 300 படுக்கைகள்.

    தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. மேலும் அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனி யாக மானிட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் குழாய்கள் பொருத் தப்பட்டு கொரோனாவார்டு தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன.

    இதில் கல்லூரி டீன் திருமால்பாபு, மருத்துவ மனை கண்காணிப்பாளர் ரதிதிலகம் உள்ளிட்டோர் தலைமையில் மருத்துவ குழு வினருடன் சிகிச்சை அளிக் கும் முறைகள் குறித்து ஒத் திகை பார்க்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

    பென்ட்லேண்ட் மருத்துவமனையில் அவசர கால ஒத்திகை இதேபோல் வேலூர்பென்ட்லேண்ட் மருத்துவமனையில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தொடங்கி வைத்தார். மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண் டர் வசதி, மருந்து மாத்திரைகள் இருப்பு, வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்யப் பட்டது.

    நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சதீஷ் மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

    ×