என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Construction worker killed"
- தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் அருகே தங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருக்கு
சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சங்கர் வீட்டின் வெளியே படுத்து இருந்தார். நள்ளிரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.
நேற்று காலை சங்கர் இல்லாததால், வீட்டு எதிரே கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்து திருப் பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி சங்கர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கவுசல்யா (24) என்ற மனைவியும், நித்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இவருக்கும் பக்கத்து தெருவை சேர்ந்த ஒர்க்ஷாப் மணி, விக்கு என்கிற சண்முகம் ஆகியோருக்கும் இடையே இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக்குமார் அரிவாளை முதுகில் வைத்தபடி புகைப்படம் எடுத்து எங்க ஏரியாவில் வந்து போட்டு பாருங்க என வசனத்துடன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனை பார்த்த ஓர்க்ஷாப் மணி, விக்கு சண்முகம் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு ஏற்கனவே ஒர்ஷாப் மணி அவரது நண்பர் விக்கு சண்முகம், சிவா, பாபு ,அமர்நாத் ஆகியோர் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் அசோக்குமாரிடம் எதற்காக இப்படி புகைப்படம் பதிவிட்டாய் என கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அசோக்குமார் காந்தி மாநகரில் உலகளந்த பெருமாள் கோயில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒர்க்ஷாப் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சண்முகம் சிவா, பாபு, அமர்நாத் ஆகியோர் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அசோக்குமாரை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.
இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த 5 பேரும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கத்திக்குத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அசோக்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அசோக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போட்டோ வெளியிட்ட கட்டிட தொழிலாளியை வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்