search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College students clash"

    • கேண்டீனில் உணவு சாப்பிடுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு தாக்கியும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் விழுந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை வண்டிகரு ப்பண்ணசாமி கோவில் பின்புறம் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    விடுதியில் தங்கி படித்தும், பல மாணவர்கள் தினசரி வந்து செல்லும் மாணவர்களாகவும் பயின்று வருகின்றனர். இவர்களில் சீனியர், ஜூனியர் என்ற வேறுபாடுகளை தாண்டி குழு அமைத்து தகராறில் சில மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது முதற்கொண்டு கேண்டீனில் உணவு சாப்பிடுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

    கல்லூரி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்தும் எச்சரிக்கை விடுத்தும் கண்டித்து வந்து ள்ளனர். இருந்தபோதும் இவர்களது மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வந்துள்ளது.

    கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட இந்த தகராறு கல்லூரிக்கு வெளியிலும் பயங்கரமாக வெடித்தது. அய்யலூர் - கடவூர் பிரிவில் நேற்று மாலை கல்லூரி மாணவர்கள் இரு குழுக்க ளாக பிரிந்து 30க்கும் மேற்பட்டோர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

    ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு தாக்கியும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் விழுந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆடுடோவில் வந்த ஒரு கும்பல் மாணவர்களை தாக்கினர். இதனை அருகில் இருந்த பொதுமக்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை.

    இதனையடுத்து வடமதுரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட சில மாணவர்களை விசா ரணைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்கப்படும் என்று போலீசார் தெரி வித்தனர். இதனிடையே மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பல்வேறு மாவட்டங்க ளில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அது பஸ்நிலையம் உள்பட பொது இடங்களிலும் பயங்கரமாக வெடித்து ள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இது போன்ற மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அது போன்ற சம்பவம் நடைபெறாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் உரிய விசா ரணை நடத்தி வருங்கா லங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×