search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CHARIOT PILGRIMAGE"

    • திருச்சியில் வருகிற 1-ந்தேதி இஸ்கான் பக்தி இயக்கம் சார்பில் பூரி ஜெகந்நாதர் பிரமாண்ட ரத யாத்திரை நடைபெறுகிறது
    • பாரம்பரியத் தோற்றம் இருந்த போதிலும் ஏர் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் என்பது உள்ளிட்ட அதி நவீன அம்சங்களை கொண்டிருக்கும்

    திருச்சி:

    திருச்சியில் முதல் முறையாக வருகிற 1-ந்தேதி புரி ஸ்ரீ ஜெகநாத் ரதயாத்திரை விழா நடைபெற உள்ளது.

    ஒடிசா மாநிலம் புரியில் நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரை போல நடத்தப்படும் யாத்திரை குறித்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) திருச்சி ஸ்ரீரங்கம் மேலாளர் நந்தபுரத்தாஸா கூறியதாவது:-

    திருச்சியில் முதன் முறையாக வருகிற ஜூலை 1-ந்தேதி ஸ்ரீ புரிஜெகந்நாத் ரதயாத்திரையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மேலசிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து தொடங்கும் யாத்திரை மாரீஸ் தியேட்டர் பாலம் வழியாக தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நிறைவடைய உள்ளது.

    புராணத்தின்படி கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை வைத்து நடைபெற உள்ள ரத யாத்திரையில் சாதி, மத பேதமின்றி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று ரதத்தை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். நவீன தொழில் நுட்பம் மற்றும் பழங்கால பாரம்பரியத்தின் கலவையாக இந்த ரதம் இருக்கும்.

    பாரம்பரியத் தோற்றம் இருந்த போதிலும் ஏர் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் என்பது உள்ளிட்ட அதி நவீன அம்சங்களை கொண்டிருக்கும். 18 அடி உயரம் கொண்ட இந்த ரதத்தை 12 அடி வரை குறைத்தும் ேதவையென்றால் கூட்டவும் செய்யலாம். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வடம் பிடித்து இழுக்கலாம். ரத யாத்திரையின் போது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கீர்த்தனைகள், நாடகங்கள் நடைபெற உள்ளன.

    யாத்திரை செல்லும் சாலைகளில் பிரசாதங்கள் வழங்கப்படும். விழா நிறைவு பெறும் மக்கள் மன்றத்திலும் பக்தி நாடகம் முடிந்தவுடன் ஆயிரக்கணக்கானோருக்கு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது செயலர் தத்லவித் நிமைதாஸ், ஒருங்கிணைப்பாளர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

    ×