search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BUS TERMINAL"

    • திருச்சி பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முதற்கட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
    • திருச்சி பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முதற்கட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

    திருச்சி:

    திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்டமாக ரூ.20.10 கோடி மதிப்பிலான கிராவல் மண் நிரப்பும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் சேவை பயன்பாட்டிற்கான பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தார். பின்னர் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.390 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். 30 ஏக்கர் பரப்பளவில் டெர்மினல் மற்றும் பஸ் நிலைய பணிகள் நடைபெற உள்ளது.

    இங்கு 404 பஸ்கள் நிற்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் இந்த பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வசதி செய்யப்படும். தெற்கு டெர்மினல் பகுதியில் மொத்த லோடு வாகனங்களும் நிற்கும்.

    அது மட்டும் இல்லாமல் 28 ஏக்கர் பரப்பளவில் மொத்த மற்றும் சில்லறை மார்க்கெட் அமைய இருக்கிறது. மேலும் சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய மேம்பாலம் அமைக்கப்படும்.

    தற்போது பஞ்சப்பூர் பைபாஸ் சாலைக்கு தேவையான நிலங்களை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தி விட்டார்கள். ஆகவே அந்தப் பணிகளும் நடைபெற இருக்கிறது. மேலும் மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் பெரிய மால் ஒன்றும், அதன் பின்னால் வர்த்தக மையம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

    திருச்சி மாநகராட்சியை பொருத்தமட்டில் பாதாள சாக்கடை பணிகள் சற்று தாமதமாக நடக்கிறது. பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் திருச்சி மாநகரில் 75 சதவீத சாலைகள் போடப்படும்.

    மேலும் 7 பெரிய சாலைகள் 7, 8 நாட்களில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளுக்கான டெண்டர் அனைத்தும் விடப்பட்டு விட்டது.

    பெரிய அளவில் தூய்மை பணியாளர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்வதை காட்டிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகளை தரம் பிரித்து மக்களே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக சென்னையில் கலைஞர் பிறந்த நாளில் மெகா தூய்மை பணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 7,200 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சப்பூர் பஸ் நிலைய அமைவிடத்தில் மூன்றடி ஆழத்துக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற பணிகள் டெண்டர் விடும் கட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த டெண்டர் பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடையும்.

    அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றேகால் வருடத்தில் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு ரூ.390 கோடிக்கு அரசாணை வெளியிட்டு இருக்கும் நிலையில் பஸ் நிலையம் வராது என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

    மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறை நடைமுறையில் உள்ளது. சென்னை பெருங்களத்தூரில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு 400 ஏக்கர் நிலத்தை பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

    அது மட்டுமல்லாமல் சென்னையில் மரக்கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பது, காய்கறி கழிவிலிருந்து கேஸ் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது.

    இந்த திட்டங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். பாதாள சாக்கடை இல்லாத பேரூராட்சி பகுதிகளில் கழிவுகளை காய வைத்து உரமாக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ரூ.350 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
    • இந்த நிதி மூலமாக ரூ,159 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், ரூ.65.90 கோடியில் டிரக்டெர்மினல், ரூ.40.30கோடியில் சாலை பணிகள், ரூ.84.78 கோடியில் பல்வகை பயன்பாட்டு முனையம் ஆகியவை அமைக்கப்படுகிறது

    திருச்சி:

    திருச்சி மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கால்நூற்றாண்டு காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் பஞ்சப்பூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் ஆட்சி மாறிய காரணத்தினால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பஞ்சப் ஊரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு முயற்சி மேற்கொண்டார்.

    பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இதை எடுத்து மண் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் முதற்கட்ட பஸ் நிலைய கட்டுமான பணிகளுக்கு ரூ.349.98 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்போது தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் சிவ் தாஸ் மீனா மேற்கண்ட தொகையினை ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளார்.

    உள்கட்டமைப்பு வசதி நிதியிலிருந்து ரூ. 140 கோடி, திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.50 கோடி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தில் இருந்து ரூ. 159.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி மூலமாக ரூ,159 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், ரூ.65.90 கோடியில் டிரக்டெர்மினல், ரூ.40.30கோடியில் சாலை பணிகள், ரூ.84.78 கோடியில் பல்வகை பயன்பாட்டு முனையம் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    இந்த கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, பஸ் நிலையம் அமையும் பஞ்சப்பூர் பகுதியில் மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் செய்ய தற்போது 8 அடி ஆழத்துக்கு களிமண்ணை எடுத்து விட்டு கிராவல் மண் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

    பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திருச்சி மாநகர வளர்ச்சியின் இன்னொரு மைல்கல்லாக அமையும். நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் நிர்வாக அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மாநகர மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    ×