என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP officials"
- மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்
- அனைத்து மாநிலங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி:
76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் அனைத்து மாநிலங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பா.ஜனதா மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் பொதுச் செயலாளர் மோகன் குமார் துணைத்தலைவர் தங்க விக்ரமன் மாநில செயலாளர் நாகராஜ் முன்னாள் தலைவர் இளங்கோவன் அலுவலக பொறுப்பாளர் மகேஷ் அலுவலக செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்டோர் நிர்வாகிகளுக்கு தேசிய கொடிகளை வழங்கினர்.
தேசிய கொடிகளை உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன், சமூக ஊடகப்பிரிவு அமைப்பாளர்கள் கார்த்தி கேயன், குருசங்கரன் மற்றும் மாநிலத்தின் பல்வேறு நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
- நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக பகுதிகளில் போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
- கோட்டகுப்பம் அடுத்த அனுமந்தையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் ஏ.டி ராஜேந்திரன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக பகுதிகளில் போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் வசிக்கும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் ஜி.கே ராஜன் வீட்டிற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மேற்பார்வையில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோட்டகுப்பம் அடுத்த அனுமந்தையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா தலைவர் ஏ.டி ராஜேந்திரன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்தில் இருந்து ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு முக்கிய இடங்களில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக கோட்டகுப்பத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்