என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP members arrested"
- பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க நிர்வாகிகள் 26 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கூடலூர்:
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றி வைக்கவேண்டும் எனவும் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் கூடலூர் பஸ்நிலையத்தில் இருந்து நகர இளைஞரணி பா.ஜ.க செயலாளர் சுபாஷ் தலைமையில் நிர்வாகிகள் சின்னமனூர் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏ.எஸ்.பி ஸ்ரேயாகுப்தா, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அரசியல் கட்சி சார்பில் கொடி அணிவகுப்பு நடத்த அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் அதனையும் மீறி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் 26 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்