search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "390 Kg"

    • வேனில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
    • ஓட்டுநர் கைது

    ஆலங்குடி, ஆக.16-

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மகேந்திரவேனில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆலங்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கலிபுல்லா நகர் வளைவு முக்கத்தில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி பரி சோதனை செய்தபோது, அதில் 390 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்ததோடு, வாகனத்தின் உரிமையாளரும், ஓட்டுநனருமான கறம்பக்குடி தாலுகா மழையூரைச்சேர்ந்த அருணாச்சலம் மகன் கோவிந்தசாமியை கைது செய்து, புதுக்கோட்டை குடிமைமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு அலுவலரிடம் ஆலங்குடி காவல் ஆய் வாளர் அழகம்மை நேற்றிரவு ஒப்படைத்தார். 

    ×